தலிபானின் புதிய தலைவரானார் முல்லா! மலாலாவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவர்!!
இஸ்லாமாபாத்: குழந்தை போராளி மலாலா யூசுப்சாயை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட முல்லா பசுலுல்லா தலிபான் இயக்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவனாக இருந்த ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டான்.

அமெரிக்க உளவுப்படை அலுவலகத்திற்கு குண்டு வைத்ததற்காக அவனது தலைக்கு 50 லட்சம் டாலர்கள் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
தெரிக் இ தலிபான் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தலிபான்களின் தலைவராக இருந்த ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டதையடுத்து அப்பதவிக்கு, முல்லா பசுலுல்லா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளான். இவன் கடந்த ஆண்டு குழந்தை போராளி மலாலா யூசுப்சாயை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவன்.
தலிபான் இயக்கத்தின் கமாண்டராக அஸ்மத்துல்லா ஷஹீன் தேர்வு செய்யப்பட்டுள்ளான் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
தெரிக் இ நிபாஸ் இ ஷரியா இ மொஹமதி என்ற இயக்கத்தின் தலைவனாக இருந்த பசுலுல்லா, பின்னர் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியின் பாகிஸ்தான் தலிபானின் கமாண்டராக மாறினான் என்பது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications