சீரியல் கில்லரா பமீலா?? .... குண்டைப் போடும் மாஜி கணவர் சாலமோன்!
நியூயார்க்: கவர்ச்சி நாயகி பமீலா ஆண்டர்சன் தனது முன்னாள் கணவருக்கு எதிராக தொடர்ந்து வழக்கில் தாக்கல் செய்துள்ள சில இமெயில்கள் அவருக்கே எதிராக திரும்பியுள்ளதால் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளார்.
பே வாட்ச் மூலம் பிரபலமானவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பமீலா ஆண்டர்சன். இவரது கவர்ச்சி குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல வருடங்களுக்கு அக்காலத்துத இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் பமீலா. தற்போது இவருக்கு 47 வயதாகிறது.
அவரது முன்னாள் கணவர் ரிக் சாலமோனுக்கும், பமீலாவுக்கும் இடையிலான வழக்கு இது. கடந்த மாதம்தான் சாலமோனுக்கு எதிராக விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார் பமீலா.
முன்னாள் கணவரால் ஆபத்து...
தனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பல்வேறு இமெயில்கள், எஸ்எம்எஸ் செய்திகள் உள்ளிட்டவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் பமீலா. மேலும் தனது பாதுகாப்புக்கு சாலமோனால் ஆபத்து உள்ளது என்றும் கூறியுள்ளார் பமீலா.
பமீலாவின் கெஞ்சல்...
அதில் ஒரு மெயிலில் உள்ள வார்த்தைதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் 47 வயதான பமீலா, திருமணத்திற்குப் பின்னர் தன்னை கர்ப்பமாக்கும்படி தன்னிடம் கெஞ்சியதாக கூறியுள்ளார்
கலைத்து விட்டார்...
சாலமோன். மேலும் அவர் கூறுகையில், குழந்தை வேண்டும் என்று கூறி என்னை தொடர்ந்து வற்புறுத்தி கர்ப்பம் தரித்த பமீலா, பின்னர் கருவைக் கலைத்து விட்டார்.
கொலையாளி...
அவர் ஒரு குழந்தைக் கொலையாளி. இப்படிப்பட்டவரை மனைவியாக அடைய எந்தக் கணவரும் விரும்ப மாட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாலமோன்.
இரண்டு முறை...
இன்னொரு மெயிலில், நீ கிட் ராக்கை மணந்திருந்தோது அவர் மூலம் கருத்தரித்தத கருவைக் கலைத்த விஷயத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாய். என்னைப் போலவே அவரிடமும் கர்ப்பமாக்கு என்று கூறி நீ வற்புறுத்தியிருந்தாய். ஆனால் குழந்தையைக் கலைத்து விட்டாய். அவர் மூலம் 2 முறை கர்ப்பம் தரித்து 2 முறையும் கருவைக் கலைத்ததாக அறிகிறேன் என்று கூறியுள்ளார் சாலமோன்.
சீரியல் கில்லர்...
கிட்டத்தட்ட பமீலாவை ஒரு சீரியல் கில்லர் என்ற அளவுக்கு குற்றம் சாட்டியுள்ளார் சாலமோன். இவர்களது வழக்கு ஏப்ரல் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.