காற்று மாசுபடுதலை தவிர்க்க பாரீஸில் அரசு போக்குவரத்து 'ப்ரீ'..!
பாரீஸ்: பாரீஸில் பொதுப் போக்குவரத்து இலவசம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது.
இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது.
கடும் குளிர்:
கடந்த சில நாட்களாக ஃப்ரான்சில் ஏற்பட்டுள்ள திடீர் குளிரினால் பாரீஸ் முழுவதும் காற்று இல்லாமல் போனது.
நச்சுப் புகை:
மேலும், வாகனங்கள் வெளியேற்றும் நச்சு புகையும், குளிரைப் போக்கிக் கொள்ள மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் ரேடியேட்டர் கருவிகளும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது.
மூன்று நாட்கள் இலவசம்:
இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாகனங்களின் புகையை தவிர்க்கவும் அங்கு மூன்று நாளைக்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
அரசு கோரிக்கை:
பாரீஸ் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் இந்த பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நகர போக்குவரத்து அமைப்புத் தலைவர் ஜீன் பால் ஹூச்சோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
லாரீஸ் ஸ்டாப் ப்ளீஸ்:
லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களை நிறுத்தி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.