118 பேருடன் கடத்தப்பட்ட லிபியா விமானம் மீட்பு.. பயணிகள் அனைவரும் மீட்பு... கடத்தியவர்கள் சரண்டர் !
118 பேருடன் கடத்தப்பட்ட லிபியா விமானம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மால்டா: செபாவில் இருந்து புறப்பட்டு திரிபோலி நோக்கி 118 பேருடன் சென்ற விமானம் கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும், விமானத்தை கடத்திய இருவர் சரணடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று லிபியாவின் செபாவில் இருந்து 118 பயணிகளுடன் திரிபோலியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், பயணிகள் போல் விமானத்தில் வந்தவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் விமானத்தைக் கொண்டு வந்தனர்.

விமான ஓட்டியை மிரட்டி விமானத்தை மால்டாவில் தரையிறங்கும்படி கட்டளையிட்டுள்ளனர். இதனையடுத்து, மிரண்டு போன விமானிகள் விமானத்தை மால்டா நோக்கி திருப்பினர். பின்னர், மால்டாவை நெருங்கியதும் விமான நிலைய அதிகாரிகளிடம் முறைப்படி விமான ஓட்டிகள் அறிவித்து அனுமதி பெற்று பின்னர் விமானத்தை தரையிறக்கினர்.
கடத்தப்பட்ட விமானத்தில் 82 ஆண்களும், ஒரு குழந்தை உள்பட 28 பெண்களும், 8 விமான பணியாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தை 2 தீவிரவாதிகள் கடத்தியதாகவும் தகவல் வெளியாகியது. திடீரென நடந்த இந்த சம்பவத்தால் மால்டா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுடன் மால்டா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முதல்கட்டமாக 65 பயணிகளை தீவிரவாதிகள் விடுவித்தனர். பின்னர் அனைத்து பயணிகளும் விடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கடத்தல்காரர்கள் சரணடைந்ததாகவும், காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடத்தல் பரபரப்பைத் தொடர்ந்து மால்டாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானங்கள் இத்தாலியன் தீவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications