பதன்கோட் தாக்குதல்: இந்தியா கொடுத்த ஆதாரங்களை ஆய்வு செய்துவருகிறோம்-பாக். பதில்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து இந்தியா கொடுத்த ஆதாரங்களை பெற்றுள்ளதாகவும், ஆய்வு செய்து வருவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சார்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது.

இதுகுறித்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களையும், தகவல்களையும் ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications