நிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்
இஸ்லாமாபாத்: நிரந்தர ஜாமின் கேட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
நவாஸ் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட ஒரு சில வழக்குகளில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

அல் அஜீசியா இரும்பாலை ஊழல் தொடர்பான வழக்கில் நவாசிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் நவாஸ் சிறையில் அவதிப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனை காரணம் காட்டி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் ஜாமின் மனு தாக்கல் செய்தார், இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக அவருக்கு கடந்த மார்ச் 26-ம் தேதியன்று 6 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது,
பாகிஸ்தானில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட ஜாமின் அது, இந்நிலையில் நீதிமன்றம் கொடுத்த ஜாமின் அவகாசம் நேற்றுடன் முடிந்தது, இந்நிலையில் தனக்கு நிரந்தர ஜாமின் வழங்க வேண்டும் என்று நவாஸ் நீதிமன்றத்தில் கோரினார்.
ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து வேறுவழியின்றி மீண்டும் நேற்று சிறைக்கு திரும்பினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் அவரை வீட்டில் இருந்து பேரணியாக சிறைக்கு அழைத்து சென்றனர்
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற பேரணி திருவிழா போல காட்சியளித்தது. அப்போது பட்டாசு மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. ஜெயிலுக்கு போவதை நவாஸின் ஆதரவாளர்கள் திருவிழா போல கொண்டாடியது வினோதமாக இருந்தது
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications