இலங்கை தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கருணா கூட்டாளி பிள்ளையான் கைது
கொழும்பு: இலங்கை தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் கருணாவின் கூட்டாளியுமான பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யாக இருந்தவர் ஜோசப் பரராஜசிங்கம். மட்டக்களப்பில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதியன்று கிறிஸ்துமஸ் விழாவின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு இலங்கை அரசுடன் இணைந்து கொண்ட கருணாவின் கூட்டாளியும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான பிள்ளையானிடம் கடந்த சில நாட்களாக அந்நாட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணைகளின் முடிவில் பிள்ளையானை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் மற்றொரு தமிழ் எம்.பி. நடராஜ ரவிராஜ் கொலை வழக்கிலும் பிள்ளையானின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications