விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே கராச்சி விபத்திற்கு காரணம் என தகவல்
கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான விபத்திற்கு விமானியின் அலட்சியம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. விமானத்தின் உயரம் மற்றும் வேகம் குறித்து விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அதை விமானி மீறி தரையிறக்க முயன்றதே விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பாகிஸ்தானில் லாகூரில் இருந்து நேற்று முன் தினம் கராச்சி நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முயன்ற போது அருகில் உள்ள குடியிருப்புகளில் மோதி விமானம் நொறுங்கியது.
இந்த விபத்தில் 97 பேர் பலியாகிவிட்டனர். இருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எச்சரிக்கை
இந்த நிலையில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே விபத்திற்கு காரணம் என தகவல்கள் கூறுகின்றன. அதாவது தரையிறங்குவதற்கு விமான கட்டுப்பாட்டு மையத்தை விமானி தொடர்பு கொண்டார். அப்போது விமான கட்டுப்பாட்டு மையங்கள் அவருக்கு விமானத்தின் வேகம் மற்றும் உயரம் குறித்து இரு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

கராச்சி விமான நிலையம்
அதாவது விமானத்தின் உயரத்தை குறைக்குமாறும், வேகத்தை குறைக்குமாறு விமான கட்டுப்பாட்டு மையம் எச்சரித்தது. ஆனால் இதை விமானி அலட்சியப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு மையம் (ஏடிசி) கூறுகையில், லாகூர் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 1.05 மணிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு 2.30 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும்.

15 நாட்டிகல் மைல்
கராச்சியிலிருந்து 15 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்த விமானம் தரையிறங்குவதற்கு 7000 அடி உயரத்தில் இருப்பதற்கு பதிலாக 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தது. அப்போதே விமானத்தின் உயரத்தை குறைக்க வேண்டும் என முதல் எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அவரோ விமானத்தின் உயரத்தை குறைக்காமல் ஒரு பிரச்சினையும் இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கராச்சி விமான நிலையத்திற்கு 10 நாட்டிக்கல் மைல் தூரம் இருந்த போது 3000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7000 அடி உயரத்தில் பறக்கவிட்டார்.

97 பேர் பலியாக காரணம்
அப்போதும் உயரத்தை குறைக்குமாறு விமானிக்கு 2ஆவது முறையாக எச்சரிக்கையுடன் கூடிய கட்டளையிட்டோம். ஆனால் அதற்கும் அந்த விமானி, தன்னால் இந்த நிலையை கையாள முடியும் என்றும் தரையிறங்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே 97 பேர் பலியாக காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications