பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!
பாரீஸ்: பருவநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஹோலண்டே மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் ஐ.நா.வின் சர்வதேச பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது இதில் மொத்தம் 147 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
President @MaithripalaS and PM @narendramodi meet in Paris at the @COP21. #COP21 pic.twitter.com/mFrtrk6FZ0
— PMO India (@PMOIndia) November 30, 2015
இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலிவிய அதிபர் ஈவோ மோரலெஸ் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
PM @narendramodi meets PM Nawaz Sharif at COP 21 in Paris pic.twitter.com/HRiY1xLoBM
— Vikas Swarup (@MEAIndia) November 30, 2015
இந்த மாநாட்டின் லாபி அறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் கை குலுக்கிய பிரதமர் மோடி சிறிதுநேரம் இருவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடினர்.