இதுதான் இந்தியா.. "டிராகன்" சீனா உடன் கைகோர்த்த மோடி.. டிரம்ப்பிற்கு அனுப்பிய வலுவான மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு இதன் மூலம் பிரதமர் மோடி பெரிய மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

டொனால்ட் டிரம்ப்பின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு அமைந்தது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இந்திய-சீன உறவுகளுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். இந்த சந்திப்பு மூலம் சீனா - இந்தியா நெருக்கமாகி உள்ளது.

china narendra modi

சீனா - இந்தியா நெருக்கம்

பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவதன் மூலம் 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும், இது மனிதகுலத்தின் நன்மைக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவை ஒரு "முக்கியமான நண்பன்" என்று கூறி வரவேற்றார். இரு நாடுகளும் தங்கள் உறவை ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்றும், எல்லைப் பிரச்சனை ஒட்டுமொத்த உறவை வரையறுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"சீனாவும் இந்தியாவும் உலகிலேயே மிகவும் நாகரிகமான, அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாங்கள் நல்ல அண்டை நாடுகளாக, நண்பர்களாக இருக்க வேண்டும். 'டிராகனும் யானையும்' ஒன்றிணைய வேண்டும்," என்று ஜி ஜின்பிங் கூறினார்.

மோடி நெருக்கம் சீனா

பிரதமர் மோடி கடைசியாக 2018-ல் வூஹானுக்குச் சென்றார். டோக்லாம் மோதலுக்குப் பிறகு நடைபெற்ற அந்தச் சந்திப்புக்கு பிந்தைய, மோடியின் முதல் சீனா பயணம் இதுவாகும். டிரம்ப் விதித்த வர்த்தகக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பதட்டமான சூழலில், இரு ஆசிய வல்லரசுகளும் பொருளாதார மற்றும் உலக அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட இந்தச் சந்திப்பு உதவியது. சமீபத்தில், இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்த 50% வரி விதிப்பை சீனா கடுமையாகக் கண்டித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக சீனா நிற்கிறது என்பதையும், அமெரிக்காவை "தாதா" என்று கண்டிப்பதையும் வெளிப்படுத்தியது.

மோடி முக்கிய மூவ்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு தற்காலிக வர்த்தக போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. அதேசமயம், அரிய வகை பூமி கனிமங்களின்ஏற்றுமதியை சீனா குறைத்தால், 200% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். தியான்ஜினில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்தார். ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த மறுத்ததால், இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி விகிதம் 50% ஆக உயர்த்தப்பட்ட பிறகு, இரு தலைவர்களுக்கிடையே இது முதல் சந்திப்பு ஆகும்.

கடந்த 2020-ல் கல்வான் மோதலுக்குப் பிறகு, இந்தியா-சீனா உறவுகள் மிக மோசமான நிலையை அடைந்தன. எனினும், கடந்த அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டில் மோடியும், ஜியும் சந்தித்த பிறகு உறவுகளில் மெதுவான முன்னேற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக, இந்தியா-சீனா இடையேயான பதட்டங்களைத் தணிப்பதற்கான புதிய உத்வேகம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ராஜதந்திரம் பல தசாப்தங்களாக இந்தியாவை சீனாவுக்கு ஒரு எதிர்சக்தியாகப் பார்த்தது, ஆனால் டிரம்ப்பின் வர்த்தகப் போர் இந்த நிலையை மாற்றி அமைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+