பாரீஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உச்சகட்ட பாதுகாப்பில் பிரான்ஸ் !
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு. அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நாட்டு தலைவர்கள் பாரீஸ் நகருக்கு வந்துள்ளதால் பிரான்ஸ் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால் இங்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பருவ நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா , இந்தியா பிரதமர்கள் உள்பட 140 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்..டிசம்பர் 11-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து பாரீஸ் புறப்பட்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி, மாநாட்டின் இடையே ஒபாமா, ஜிங்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அண்மையில் பாரீசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் பாரிசுக்கு உலக தலைவர்கள் பலர் வரவிருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியில் ராணுவம் மற்றும் போலீசார் உள்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications