5 தமிழக மீனவர் தூக்கை ரத்து செய்த ராஜபக்சேவுக்கு மோடி நேரில் நன்றி!
காத்மாண்டு: 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி நேரில் நன்றி தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அனைவர் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர் விடுதலை குறித்து பேசினார்.
பின்னர் இந்திய தூதரகம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் 5 தமிழக மீனவர்களும் தமிழகம் திரும்பினர்.
இந்நிலையில் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சார்க் நாடுகளின் மாநாடு இன்று தொடங்கியது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூட்டான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய மாநாட்டின் ஒருபகுதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது 5 தமிழக மீனவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்காக ராஜபக்சேவுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications