பிரான்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி! அசத்தலான வரவேற்பு! இருநாட்டு வீரர்கள் அணிவகுத்து மரியாதை
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான ‛பாஸ்டில் டே' இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். பிரான்ஸ் நாட்டின் படை வீரர்கள் புடைசூழ விழாவுக்கு பிரதமர் மோடி அழைத்து வரப்பட்ட நிலையில் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அவர் இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ‛பாஸ்டில் டே' என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலக தலைவர்களை அந்நாடு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் தான் இந்த ஆண்டுக்கான தேசிய தினத்துக்கான கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் சென்றார். விமானத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உற்சாகமாக பேசினார். யூபிஐ பணப்பரிவர்த்னை பற்றி பிரதமர் மோடி பெருமையாக கூறினார். மேலும், ‛‛பிரான்ஸில் திருவள்ளூவர் சிலை நிறுவப்படும். இது இந்தியாவுக்கான பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்'' என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் மோடிக்கு அவர் இரவு விருந்து வழங்கினார். மேலும் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருதை இமானுவேல் மேக்ரான் வழங்கினார்.
இந்நிலையில் தான் இன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவுக்கு பிரதமர் மோடி காரில் அழைத்து வரப்பட்டார். காரை சுற்றி பிரான்ஸ் நாட்டின் படை வீரர்கள் சூழ்ந்து வர பிரதமர் மோடி காரில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.
அதேபோல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவரது மனைவியும் விழாவுக்கு காரில் வந்திறங்கினர். இதையடுத்து தேசிய தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இருநாட்டு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இந்த அணிவகுப்பு மரியாதையில் இந்தியாவின் முப்படை வீரர்கள் பங்கேற்று இருநாட்டு தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தினர். மேலும் இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான "ஐஎன்எஸ் சென்னை" இந்த விழாவில் பங்கேற்றது. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு நடந்தது.
பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இதற்கு முன்பு கடந்த 2009ல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்த பங்கேற்றார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவுக்கு பிறகு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
மேலும் இமானுவேல் மேக்ரானையும் சந்தித்து தொழில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொள்ளும் பிரதமர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு புறப்பட்டு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications