பிரான்சில் இருந்து விடைபெற்ற மோடி, ஜெர்மனி சென்றடைந்தார்! முதலீட்டாளர்களை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: மூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி.
பிரான்ஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை இன்று மதியம் முடித்துக் கொண்ட, மோடி, மாலையில் ஜெர்மனி சென்றடைந்தார்.

அங்கு மொத்தம் மூன்று நாட்கள் தங்க உள்ள மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், ஜெர்மனிய
தொழில் நிறுவனங்களை இந்தியாவில் தொழில் செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
ஹன்னோவர் கண்காட்சியில் இம்முறை இந்தியாவும் பார்ட்னராக மாறியுள்ளது. எனவே அங்கும் மோடி செல்ல உள்ளார். இங்கு வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்களை மோடி இந்தியாவுக்கு ஈர்க்க உள்ளார்.
ஹன்னோவரில் மகாத்மா காந்தி சிலையையும் மோடி திறந்து வைக்க உள்ளார். பெர்லின் நகர ரயில் நிலையத்தை சுற்றி பார்க்க உள்ள மோடி, அதன்படி இந்தியாவின் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது குறித்து ஆராய உள்ளார்.












Click it and Unblock the Notifications