For Quick Alerts
For Daily Alerts
Just In
கவிஞர் சீனி நைனா முகம்மது மலேசியாவில் மாரடைப்பால் மரணம்
தனிச் சிறந்த தமிழறிஞரும், 2011ம் ஆண்டில் அனத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை டத்தோ ஹாஜி இக்பால், மர்ஹூம் புலவர் ப.மு.அன்வர் ஆகிய பெருமக்களுடன் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடத்தியவரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், மலேசியாவின் மாண்பார்ந்த தமிழ்க்குடிமகனும் ஆன மூத்த கவிஞர் சீனி நைனாமுகம்மது அவர்கள் இன்று பினாங்கில் மாரடைப்பால் காலமானார்.
தொல்காப்பியப் பேரறிஞரும், மகத்தான மரபுக் கவிஞரும் ஆன சீனி நைனாமுகம்மது அவர்களின் மறைவு உண்மையிலேயே மொழிக்கும், சமுதாயத்திற்கும் பலவகையிலும் பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Poet Seeni Naina Mohammad died of cardiac arrest in Penang, Malaysia on thursday.
Story first published: Thursday, August 7, 2014, 17:17 [IST]