போகிமான் கோ விளையாடியபடி காரை ஓட்டி பெண்ணை கொன்ற டிரைவர் கைது
டோக்கியோ: போகிமான் கோ விளையாடியபடி காரை ஓட்டி பெண்ணை கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'போகிமோன் கோ' வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மொபைல் போன் விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. போகிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த விளையாட்டு ஜப்பானிலும் பிரபலமாகி வருகிறது. ஜப்பானில் உள்ள டோகுஷிமா நகரில் நேற்று முன்தினம் 39 வயதான நபர் ஒருவர் காரை ஓட்டி சென்றார். அப்போது ஒரு கையால் காரை ஓட்டி கொண்டும், மறு கையால் போக்கி மேன் கோ விளையாட்டையும் விளையாடி சென்றுள்ளார்.
அப்போது எதிரே இரண்டு பெண்கள் சாலையை கடக்க முயன்றபோது அதனை கவனிக்காத ஓட்டுனர் இருவர் மீதும் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.