நானும், அம்மாவும் இந்தியா திரும்பணும்.. அனுமதி கொடுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய போலந்து சிறுமி
வார்சா: நானும் அம்மாவும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். அதற்கு அனுமதி கொடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு போலந்து சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
போலந்து நாட்டை சேர்ந்தவர் சிறுமி அலிக்ஜா வனாட்கோ(11). இவர் கோவாவில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். இவரது தாய் மார்ட்டா கோட்லார்ஸ்காவுடன் ஓவியராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார்.
இவர் மல்ட்டிபிள் என்ட்ரி பி2 விசா மூலம் தன் மகளை பார்க்க இந்தியாவுக்கு வந்தார். அப்போது தாயின் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததால் அவர் நாடு கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து சிறுமியை அழைத்து செல்ல நிபந்தனையுடன் கூடிய அனுமதி மார்ட்டாவுக்கு வழங்கப்பட்டது.
|
சுஷ்மா ஸ்வராஜ்
அதன் பேரில் கோவாவில் இருந்த சிறுமியை அந்த தாய் அழைத்து கொண்டு கடந்த மார்ச் 24-ஆம் தேதி போலந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே அந்த சிறுமியின் தாய், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு தங்களை இந்தியாவுக்கு திரும்ப அனுமதிக்க அனுமதி கோரினார்.

உருக்கமான கடிதம்
ஆனால் இவரது கோரிக்கைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது தாயும், மகளும் கம்போடியாவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அலிக்ஜா, இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து அவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

வாழ்க்கை
அதில் அவர் கூறுகையில் விசா முடிந்தும் தங்கியதால் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாங்கள் இந்தியாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்யப்படுவோர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம். தற்போது எனது தாயுடன் இருந்தாலும் நான் விரும்பும் நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை என்னால் இங்கு வாழ முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் கடிதம்
அது போல் அவரது தாயும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது மகளுக்கு கோவாவில் படித்த பள்ளித்தான் பிடித்திருக்கிறது. அடுத்த ஆண்டு பள்ளிக் கூடத்தை நினைத்து தற்போது அச்சப்படுவதாகவும் நீங்கள் உதவக் கூடியவர் என்பதால் எங்களை இந்தியாவுக்கு அனுமதிக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திப்பதாக தாய் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த கடிதங்கள் வெளியறவுத் துறை அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications