சிங்கப்பூர் பிரதமரின் பொங்கலே பொங்கல் வாழ்த்து! - வைரலாகும் பொங்கல் புகைப்படம்
சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் 'பொங்கலோ பொங்கல்!' என்று வாழ்த்துத் தெரிவித்து இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல்வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த லீ சியன் லூங்,சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை என்று குறிப்பிட்டுருந்தார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல்வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்த கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த லீ சியன் லூங் சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை என்று குறிப்பிட்டுருந்தார்.