"போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்" இரத்தம் கண்ணீர் ஆறாக ஓடுகிறது -போப் பிரான்சிஸ் வேதனை

Subscribe to Oneindia Tamil

வாட்டிகன் : "போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்" எனவும், உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாக ஓடுகிறது என போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கியது.

உக்ரைன் மீதான 11ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற பகுதிகள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.

உக்ரைன் ராணுவம்

உக்ரைன் ராணுவம்

பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒரு புறம் கூறினாலும் மற்றொருபுறம் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். 10வது நாள் போர் வரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் போர் தொடர்ந்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும் உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக நிலைமை அங்கு மேலும் தீவிரமாகி வருகிறது.

போர் பைத்தியக்காரத்தனம்

போர் பைத்தியக்காரத்தனம்

இந்நிலையில் "போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்" எனவும், உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாக ஓடுகிறது என போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உக்ரைனில் ரத்த ஆறுகளும் கண்ணீரும் ஓடுகிறது. இது ஒரு இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, மரணம், அழிவு மற்றும் துயரத்தை விதைக்கும் ஒரு போர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மக்கள் வெளியேறுகிறார்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகள். அந்த பிரச்சனையில் இருக்கும் நாட்டில் மனிதாபிமான உதவியின் தேவை மணிநேரத்திற்கு வியத்தகு அளவில் வளர்ந்து வருகிறது.

சமதானத்தின் சேவை

சமதானத்தின் சேவை

இந்த சமாதானத்தின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, பரிசுத்த கடல் எல்லாவற்றையும் செய்யத் தயாராக உள்ளது... "போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள், தயவுசெய்து! இந்தக் கொடுமையைப் பாருங்கள்!". வெடிகுண்டுகள் மற்றும் அச்சத்தால் ஒடுக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கு இன்றியமையாத நிவாரணம் வழங்குவதற்காக, மனிதாபிமான தாழ்வாரங்கள் உண்மையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், முற்றுகையிடப்பட்ட பகுதிகளுக்கு உதவி உத்தரவாதம் அளிக்கப்படவும், அணுக வசதி செய்யவும் இதயப்பூர்வமான வேண்டுகோள் விடுக்கிறேன்.

Recommended Video

    Ukraine-ஐ பிடிக்க Syria வீரர்களை களமிறக்கும் Russia?
    அகதிகளை அழைத்துச் செல்ல வேண்டும்

    அகதிகளை அழைத்துச் செல்ல வேண்டும்

    அகதிகளை அழைத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை - மற்றும் பொது அறிவு - வெற்றிபெற வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச சட்டத்தை மீண்டும் ஒருமுறை மதிக்க வேண்டும்! " என பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள ரஷிய தூதரகத்துக்கு திடீரென்று நேரில் சென்று அங்கிருந்த தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை தெரிவித்து, போரை உடனே நிறுத்துமாறு தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+