வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி
மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன், நேரடியாக வீரர்களை வைத்து போரிடாமல், ரோபோக்கள் மற்றும் ஆளில்லா இயந்திரங்களை வைத்து போரிட தொடங்கியுள்ளது. போரில் பெருமளவு இழப்புகளை ஏற்கனவே சந்தித்த உக்ரைன், மேற்கொண்டு இழப்பை தவிர்க்க இப்படியான புதிய யுக்தியை கையாள தொடங்கியுள்ளது.
உக்ரைனின் இந்த ஆயுதங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் ரஷ்ய வீரர்களும் திணறுகிறார்களாம். ஒவ்வொரு மாதமும் சுமார் 35,000 ரஷ்ய வீரர்களுக்கு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுத்தும் இலக்கை நிர்ணயித்து இந்த ஆயுதங்களை உக்ரைன் களமிறக்கியுள்ளது.

4 ஆண்டுகளாக நீடிக்கும் போர்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் போர் வெடித்தது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது 4 ஆண்டுகள் ஆகியும் இந்த போர் தொடர்ந்து நீடித்துக்கொண்டே உள்ளது.
உக்ரைனில் கணிசமான இடங்களை ரஷ்யா கைப்பற்றிய போதிலும் உக்ரைனும் கடுமையான பதில் தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா நினைத்ததைவிட இந்த போர் தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரால் பொருளாதார ரீதியாக பாதிப்பு, உயிர் சேதம் என பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு பலன் இல்லை.
ரோபோ தானியங்கி இயந்திர ஆயுதங்கள்
போதாக்குறைக்கு தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே போர் வெடித்ததால், அந்த ரஷ்யா போரில் அமெரிக்கா போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையே மீண்டும் போர் தீவிரம் அடைந்துள்ளது. தங்கள் நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது என்று சொல்வது போல, உக்ரைன் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை களமிறக்காமல் ரோபோ, மற்றும் தானியங்கி இயந்திர ஆயுதங்களை உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. ராணுவ கமாண்டோக்கள், படைகளை நேரில் வழிநடத்துவதற்குப் பதிலாக கணினித் திரைகள், லைவ்ஸ்ட்ரீம்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் எப்படி நடைபெறுகிறது?
இந்த தாக்குதல் எப்படி நடைபெறுகிறது என்றால், வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் ரஷ்ய நிலைகளை குறிவைத்து தாக்குகின்றன. ஒரு உக்ரைன் வீரர் கூட நேரடியாக களத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ரோபோக்களை வைத்தே அனைத்து தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள கமோண்டாக்கள் அந்த ரோபோக்களை தொலைதூரத்திலிருந்து வழிநடத்தி தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
வெடிகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் இந்த ரோபோக்களுக்கு சைலண்ட் டெத் என்று ரஷ்ய வீரர்களே பெயர் வைத்துள்ளதாக உக்ரைனிய வீரர்கள் கூறுகிறார்கள். போரின் துவக்கத்தில் இத்தகைய ரோபோ ஆயுதங்கள் கிடைத்து இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருப்பேன் என்று உக்ரைன் ராணுவ தளபதி ஒருவர் கூறினார்.
இந்த இயந்திரங்கள் மிகவும் அமைதியாக நகர்வதால், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு வந்த பிறகுதான் அவற்றின் சத்தத்தைக் ரஷ்ய வீரர்களால் கேட்க முடிகிறது. ஆனால் இந்த தூரம் என்பது அபாய எல்லைக்குள் வந்துவிடும் நிலை என்றும் உக்ரைன் வீரர்கள் கூறுகிறார்கள். உக்ரைனின் இந்த முடிவுக்கு பின்னால் யுக்தி என்பதை விட அவசிய தேவையே மேலோங்கி நிற்பதாக தெரிகிறது. ஏனெனில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் போரில், குறைந்த மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பெருமளவிலான உயிரிழப்புகளையும் சேதங்களையும் சந்தித்துள்ளது. இதனை தவிர்க்கவே ரோபோட்டிக் இயந்திரங்களை அதிகமாக உக்ரைன் சார்ந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications