அதிகரிக்கும் இஸ்லாமிய வன்முறையால் கிறிஸ்தவர்களிடையே வலுப்பெறும் ஒற்றுமை.. போப்பாண்டவர்
வாடிகன்சிட்டி: இஸ்லாமிய மற்றும் பிற வன்முறைகளால், கிறிஸ்தவர்கள் இடையே ஒற்றுமை வலுப்பட்டு வருவதாக போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் சண்டைகள், மோதல்கள், வன்முறைகளால் கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமை வலுப்பட்டு வருவதாக எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ தலைவர் அபுனா மத்தியாஸுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் தெரிவித்தார் போப்பாண்டவர்.

சமீபத்தில் கியூபாவில் ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் தலைவரை சந்தித்தபோதும் கூட இதையே போப்பாண்டவர் அவரிடம் குறிப்பிட்டு, உலகெங்கும் கிறிஸ்தவர்களிடையே, ஒற்றுமை வலுப்பெறுவது குறித்து விவாதித்தார். மேலும் மத்திய கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் கிறிஸ்தவர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
வாடிகன்சிட்டியில், அபுனா மத்தியாஸ் போப்பாண்டவரைச் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்குப் பின்னர் பேசிய போப்பாண்டவர், பல்வேறு பிரச்சினைகளில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் பிரிந்து கிடந்தாலும்கூட, தற்போது பெருகி வரும் இஸ்லாமிய வன்முறையும், பிற வன்முறைச் சம்பவங்களும் அவர்களை ஒருங்கிணைத்து வருகின்றன.
பல்வேறு சம்பவங்களில் கிறிஸ்தவர்கள் சிந்திய ரத்தங்கள், கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கான விதையாக அமையும் என்று கூறினார் போப்பாண்டவர்.
லிபியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடற்படையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எத்தியோப்பாவியாவைச் சேர்ந்த 28 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்து எத்தியோப்பிய கிறிஸ்தவ சபைக்கு கடிதம் எழுதியிருந்தார் போப்பாண்டவர்.
இந்த நிலையில் தற்போது மத்தியாஸுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் கூறுகையில், எத்தியோப்பிய கிறிஸ்தவ சமூகம், தியாகிகளின் சபையாக மாறியுள்ளது என்றார்.
உலகில் உள்ள மிகப் பழமையான ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சுகளில் ஒன்றாக திகழ்கிறது எத்தியோப்பிய ஆர்த்தோடாக்ஸ் சர்ச். இந்த சர்ச்சில், யூதர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications