போப்பாண்டவர் உடல் நிலையில் சிறு முன்னேற்றம்! கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்த வாட்டிகன்!
ரோம்: கடந்த சில ஆண்டுகளாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வந்த போப்பாண்டவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இரட்டை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆக்ஸிஜன் உதவியால்தான் தற்போது வரை சுவாசித்து வருகிறார். மறுபுறம் அவர் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கிறிஸ்தவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 130 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு போப்தான் தலைவர். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 17.7% ஆகும். கி.பி 1ம் நூற்றாண்டில் போப் பதவி உருவாக்கப்பட்டது. முதல் போப்பாண்டவராக செயின்ட் பீட்டர் இருந்திருக்கிறார். அடுத்த வந்த போப் அனைவரும் இவரின் வாரிசாக கருதப்படுகிறார்கள். இப்போது போப் பதவியில் இருக்கும் போப்பாண்டவர் 266வது போப் போப் பிரான்சிஸ் (Pope Francis) ஆவார்.
கடந்த 2013ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட இவர், லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் ஆக அறியப்படுகிறார். இவருக்கு சிறு வயது முதல் ப்ளூரிசி (Pleurisy) எனும் நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது. எனவே நுரையீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் நுரையீரல் தொற்றை எதிர்கொண்டார்.
அவருக்கு தற்போது இரட்டை நிமோனியா பிரச்சனை இருக்கிறது. அதாவது, இரண்டு நுரையீரலும் நிமோனியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த அவர், வாட்டிகனிலிருந்த வெளியேறி ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது உடல் நிலை மிக மோசமானதால் பிப்.14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவர் சுவாசித்து வருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போப்பின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வாட்டிகன் தெரிவித்திருக்கிறது. அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில்தான் இருக்கிறார். இருப்பினும் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருக்கிறது என வாட்டிகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications