வடமேற்கு ஐரோப்பியாவைத் புயல் தாக்கியதில் 13 பேர் பலி: நகரங்கள் இருளில் மூழ்கின
லண்டன்: ஐரோப்பிய நாடுகளை இன்று காலை புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து கடும்புயல் தாக்கத்துக்கு ஆளாகியது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை வடமேற்கு ஐரோப்பிய நாடுகளை மணிக்கு 191 கி.மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது.
இந்த புயலின் தாக்குதலில் ஜெர்மனி நாட்டில் 6 பேர், பிரான்சில் ஒரு பெண், டச்சு நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு பெண், தெற்கு இங்கிலாந்தில் 2 பேர், லண்டனில் 3 பேர் என மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர். புயலின் எதிரொலியாக லண்டன், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புயலைத் தொடர்ந்து 30 முதல் 40 செமீ வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் எதிரொலியாக இங்கிலாந்தில் 6 லட்சம் வீடுகளும் பிரான்சில் 42 ஆயிரம் வீடுகளும் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. லண்டன் மற்றும் ஜெர்மனியின் பல பகுதிகளில் ரயில் சேவையும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications