ஆட்டுக்கும், பப்பாளி பழத்துக்கும் கொரானாவோ.. நாங்க ஃப்ரி ஆகி விட்டோம்.. அறிவித்தார் தான்சானிய அதிபர்
தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்துவிட்டது தான்சானியா
டொடோமா: ஆட்டுக்கும், பப்பாளி பழத்துக்கும் கொரோனாவா என்று ஒட்டுமொத்த நாடே அன்று அலறியது.. ஆனால், இன்றோ, "சாத்தானின் வேலையை தெறிக்க விட்டுவிட்டோம்" என்று தான்சான்யா கெத்து காட்டி வருகிறது.. அந்த நாடு கொரோனாவில் இருந்து முழுசுமாக விடுதலை அடைந்து தொற்றே இல்லாத மாறிவிட்டது.. இதைதான் பெருமிதமாக அந்நாட்டு அதிபர் இவ்வாறு சொல்லி உள்ளார்.
இவ்வளவு மாதமாக ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் உலக நாடுகளே திணறிவிட்டன.. லட்சக்கணக்கானோரை இந்த வைரஸ் காவு வாங்கினாலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்க வழியில்லை. எப்படியோ அடுத்த வருடம் ஆகிவிடுமாம். அதற்காக இப்போதே ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டு வேலை பார்த்து வருகின்றனர்.

இதனிடையே மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், சில நாடுகள் மொத்தமாகவே விரட்டி அடித்து கொண்டு வருகின்றன.. இதில் முதலில் குட் புக்கில் இடம்பெற்றது நியூசிலாந்துதான். இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவின் துடிப்பான விடாமுயற்சியும், அதற்கு மக்கள் அளித்த முழு ஒத்துழைப்பும்தான்.
அதேபோல மற்றொரு நாடாக தான்சானியா திகழ்கிறது.. ஆரம்பத்தில் இந்த நாட்டில் ஏகப்பட்ட தொற்று வந்ததாக சொல்லப்பட்டது.. இத்தனை பேர் பாதிப்பா என்று அதிபர் ஜான் மகுபூலியே அலறிவிட்டார்.. இறக்குமதி செய்யப்பட்ட அந்த டெஸ்ட் கருவிகள் மீது அதிபருக்கு சந்தேகம் வந்தது.. அதனால் ஆடு, பப்பாளிப் பழத்தில் இருந்து எடுத்த மாதிரிகளை மனிதர்களின் பெயரில் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பினர்.
Recommended Video
அந்த ரிசல்ட்டில் பப்பாளிப் பழத்துக்கும் கொரோனா, ஆடுகளுக்கும் கொரோனா என்று வரவும் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியடைந்தது.. அதன்பிறகுதான், அந்த டெஸ்ட் கருவிகளே தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதெல்லாம் ஆரம்பத்தில் நடந்து முடிந்த நிலையில், அந்நாட்டு இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது..
காரணம், இதுவரை இங்கு 509 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.. இதில் 29 பேர் உயிரிழந்திருந்தனர்... இப்படி ஒரு சாதனையை செய்ததற்காக அந்நாட்டின் அதிபர் ஜான் மகுபூலி "சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டது" என்று மார்தட்டி சொல்லி உள்ளார்.. அந்த வகையில் தொற்றே இல்லாத நாடாக பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது தான்சானியா!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications