மோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை
பிரதமர் மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூயார்க்: பிரதமர் மோடியுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்து நடந்த பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பு சர்ச்சையாகி உள்ளது. இதில் அவர்கள் இருவரும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிக்கொண்டார்கள்.
அதில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொன்னார்
இதில் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதை குறித்து பேசினார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் மறுப்பு
ஆனால் இதற்கு இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்சனையை இந்தியா - பாகிஸ்தானின் தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்ப்போம், வேறு நாட்டை இதில் ஈடுபடுத்த மாட்டோம் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மோடி டிரம்ப்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

என்ன சர்ச்சை
இந்த பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து டிரம்பின் ஆலோசகர் லாரி குட்லோவ் கருத்து தெரிவித்துள்ளார். மிகவும் கோபமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்க அதிபர் வாயில் வந்ததை எல்லாம் அப்படியே பேச மாட்டார். அவர் சொன்னது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை.

ஏன் இல்லை
இதில் அவர் பொய் சொல்ல வேண்டும் என்று என்ன இருக்கிறது. அவர் நடந்த விஷயத்தைதான் பேசி இருக்கிறார். தானாக எதையும் அவர் உருவாக்கி பேசவில்லை. டிரம்ப் பேச்சு குறித்து இப்படி எழுப்பப்படும் கேள்விகளே தவறானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் சர்ச்சை
இதனால் மீண்டும் தற்போது அமெரிக்கா இந்தியா உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் கருத்தில் உண்மை இருக்கிறதா? அப்படி என்றால் உண்மையில் மோடி டிரம்ப்பிடம் உதவி கேட்டாரா, காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மோடி உதவி கேட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு இதுவரை மோடி பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications