Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிளாக் மேஜிக்.." சொந்த கட்சிக்குள்ளேயே இப்படியா.. நொந்துபோன முய்சு! அலறும் மாலத்தீவு! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

மலே: மாலத்தீவு அதிபராக முய்சு பதவிக்கு வந்தது முதலே இந்தியா மாலத்தீவு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே உள்ளூரில் அதிபர் முய்சுவுக்கு எதிராக அவரது சகாக்களே திரும்பியுள்ளார்களாம். இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. முய்சுவுக்கு எதிராகத் திரும்பிய அந்த அமைச்சர் யார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாலத்தீவு நாட்டிற்கு எப்போது அதிபராக முய்சு வந்தாரோ அப்போது முதலே அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.

Maldives world

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இரு நாட்டு உறவுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மாலத்தீவு: குறிப்பாக மாலத்தீவுக்கு உதவும் வகையில் இந்திய ஹெலிகாப்டர்களை வழங்கிய நிலையில், அதை ஆப்ரேட் செய்ய இந்திய வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்களை வெளியேறச் சொன்னார் முய்சு.. அதேபோல சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அவர், சின கப்பல்களையும் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தார். இவை எல்லாம் இரு நாட்டு உறவுகளைக் கடுமையாகப் பாதித்தது.

இதுபோல இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் முய்சு ஈடுபட்டு இருந்த நிலையில், உள்ளூரில் முய்சுவை ஒழித்துக் கட்டும் முயற்சியில் அவரது சகாக்களே ஈடுபட்டு உள்ளார்களாம். முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் செய்யும் முயற்சியில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவரே ஈடுபட்டு இருந்தார். இதற்கிடையே முய்சுவுக்கு எதிராகத் திரும்பிய சகா யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Maldives world

உள்நாட்டில் சிக்கல்: இதற்கிடையே மாலத்தீவு அமைச்சர் பாத்திமத் ஷம்னாஸ் அலி சலீம் என்பவர் அமைச்சரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது சகோதரர்கள் உடன் இணைந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் அதாவது சூனியம் வைக்க முயன்றதாகவும் இதன் காரணமாகவே அவர் மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலத்தீவு நாட்டின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராக இருப்பவர் தான் சலீம்.. கடந்த ஜூன் 23ஆம் தேதி சலீம் உட்பட 3 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டனர். அவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைச்சராக இருந்த நிலையில், இப்போது அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மவுனம் காக்கும் மாலத்தீவு அரசு: ஷாம்னாஸ் உள்ளிட்ட 3 பேர் தொடர்பான ஒரு வழக்கை போலீசார் விசாரித்து வருவதை அந்நாட்டின் உதவி போலீஸ் கமிஷனர் அகமது ஷிஃபான் உறுதி செய்துள்ளார். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாலத்தீவு அதிபரான முய்சு அந்நாட்டின் தலைநகரான மலே அதிபராக இருந்த போது அங்கு நகர சபையின் உறுப்பினராக இருந்தவர் தான் இந்த ஷாம்னாஸ். முய்சு அதிபர் தேர்தலில் வென்ற பிறகு நகர சபையின் உறுப்பினர் பதவியை ஷம்னாஸ் ராஜினாமா செய்த நிலையில், அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் தனக்கு அமைச்சர் பதவி வழங்கிய முய்ஸுவுக்கே எதிராக ஷாம்னாஸ் பிளாக் மேஜிக் செய்துள்ளார்.

அடுத்து என்ன: மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே பிளாக் மேஜிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் பிளாக் மேஜிக் காரணமாக அங்கே கொலை சம்பவங்கள் கூட நடந்துள்ளன. இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் பிளாக் மேஜிக் செய்வதற்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். அதேநேரம் மாலத்தீவு தண்டனைச் சட்டத்தின் கீழ் இது கிரிமினல் குற்றமாகாது. எனவே, ஷம்னாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+