வரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீன பயணம்.. யாசர் அராஃபத் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாலஸ்தீனம் சென்றடைந்தார்.
ரமல்லாஹ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாலஸ்தீனம் சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் ஹுசைனை சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து இன்று பாலஸ்தீனம் நாட்டுக்கு சென்றடைந்தார். அவரை பாலஸ்தீனம் நாட்டு பிரதமர் ரமி ஹமதல்லா வரவேற்றார்.

மோடி அஞ்சலி
அங்கிருந்து முன்னாள் பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராஃபத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும், இந்தியா - பாலஸ்தீனம் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அம்மான் புறப்பாடு
பின்னர் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அதிபர் அப்பாஸுடன் மதிய உணவு சாப்பிடும் மோடி, பின்னர் பாலஸ்தீனத்தில் இருந்து அம்மான் நகருக்கு புறப்படுகிறார்.

முதல்முறையாக பயணம்
கடந்த ஆண்டு முதல் முறையாக இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி. அப்போது மேற்கு கரையில் உள்ள ரமல்லாஹ் நகருக்கு செல்லவில்லை. இந்நிலையில் இம்முறை பிரதமர் மோடி ரமல்லாஹ் நகருக்கு முதல்முறையாக சென்றுள்ளார்.

இந்திய மக்களுடன் சந்திப்பு
துபாயில் நாளை நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை அவர் சந்தித்து பேசுகிறார்.

முதல்முறையாக ஓமன்
அடுத்த நாளான 12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலையே அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார்
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications