விரைவில் இரண்டாவது குழந்தை: சூசகமாக தெரிவித்த இளவரசர் வில்லியம்
டூன்டின்: விரைவில் தான் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகப் போவதை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் மகன் இளவரசர் ஜார்ஜ் ஆகியோருடன் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தில் அனைவரின் கண்களும் அமுல் பேபி போன்று அம்சமாக இருக்கும் குட்டி இளவரசர் மீது தான்.
இந்நிலையில் ஜார்ஜ் பிறந்தபோது நியூசிலாந்து அரசின் பரிசாக சால்வை ஒன்று அளிக்கப்பட்டது. அந்த சால்வையை சிந்தியா ரீட் என்பவர் பின்னிக் கொடுத்தார். அவரை சந்தித்த வில்லியம் நீங்கள் விரைவில் இன்னொரு சால்வை பின்ன வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்து அரசு அளித்த இரவு விருந்தின்போது கேட் மது எதுவும் அருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்துள்ளார். இதனால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வில்லியம் கூறியதை பார்த்தால் அவர் விளையாட்டுக்கு தெரிவித்தது போன்று இல்லை என சிந்தியா தெரிவித்துள்ளார்.