எப்படி செக்ஸ் வெச்சிக்கிறது.. டிஸ்டன்ஸ் கடைப்பிடிச்சா "மத்தது" எல்லாம்? கதறும் பாலியல் தொழிலாளர்கள்
கிரீஸ் நாட்டில் புதிய கட்டுப்பாடுகளால் பாலியல் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
ஏதென்ஸ்: "தொழிலும் செய்யணும்.. கொரோனாவையும் சமாளிக்கணும்..ன்னா எப்படி? மாஸ்க் போட்டுக்கிட்டு வந்தால், கஸ்டமரை எப்படி நாங்க திருப்திப்படுத்தறது? கைகூட குலுக்க கூடாதுன்னா, மத்தது எல்லாம் எப்படி ரூமில் நடக்கும்?" என்று கிரீஸ் நாட்டு பாலியல் தொழிலாளிகள் புலம்ப தொடங்கி உள்ளனர்!
உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது.. தொற்று மேலும் அதிகமாகும் என்று ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. இந்த சூழலில் கொரொனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அந்த வகையில் கிரீஸ் நாடும் ஒன்று.. பல துறைகளுக்கும் கட்டுப்பாட்டை விதித்த அந்நாட்டு அரசு, பாலியல் தொழிலாளர்களும் சில ரூல்ஸ் போட்டுள்ளது.. அதன்படி, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஏதென்ஸில் பாலியல் தொழிலாளார்கள் எல்லோருமே, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கஸ்டமரின் முகத்தை நேரடியாக பார்க்ககூடாது. மாஸ்க் அணிய வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன.
திடீருன்னு கிளம்பிய பூட்டான் எல்லை பிரச்சினை.. இந்தியாவை எதிர்கொள்ள சீனா தந்திரம்
சமாளிப்பு
இந்த ரூல்ஸை கேட்டு பாலியல் தொழிலாளர்கள் அதிர்ந்துள்ளனர்.. இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "தொழிலும் செய்யணும், கொரோனாவையும் சமாளிக்கணும்னா எப்படி? இந்த 3 மாசத்துல நாங்க கடுமையா பாதிச்சிருக்கோம்.. கையில் காசு இல்லை.. பசியை மறப்பதற்காக முடிந்தவரை தூங்க முயற்சி செய்கிறோம்.
தொழில்
இங்க பாருங்க, எங்க கஸ்டமர் ரூமெல்லாம் எப்படி இருக்குன்னு.. சுத்தம் செய்து காற்றோட்டமாக வைத்துள்ளோம்.. வேறு எந்த தொழிலையும் விட தொற்றுநோய்க்கான அபாயம் எங்களுக்கு குறைவுதான்.. கைகூட குலுக்ககூடாதுன்னு சொன்னால், எப்படி ரூமுக்குள்ள மத்தது எல்லாம் நடக்கும்?
மோசம்
மாஸ்க் போடணுமாம்.. ஒரு கஸ்டமர் மாஸ்க் போட்டுட்டு வந்தால் எப்படி சந்தோஷப்படுத்த முடியும்? இப்படித்தான் எய்ட்ஸ் நோய் வெடித்தபோது அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் மோசமாக இருந்தன.. ஆனால் சில மாதத்துக்கு பிறகு ஆணுறை அணிவது நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று தெரியவந்தது.. ஆனால், இப்போது நம்மை பாதுகாக்க எந்த வழியும் இல்லை.
அரசு உதவி
இருந்தாலும், இந்த தொற்று காரணமாக, கிரேக்க நாட்டில் இயங்கும் விபச்சார விடுதிகள் சட்டபூர்வமான தடையை வெளிப்படுத்தியுள்ளன... ஆனால், அவர்களுக்கு அரசின் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை" என்று புலம்பலை வெளிப்படுத்தி உள்ளனர்.. கிரேஸ் நாட்டின் இந்த வேற லெவல் தடையை நினைத்து பெரும்பாலானோர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.