துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்.. அந்த வார்த்தையை சொல்லி சீறிய புடின்.. கடும் வார்னிங்.. சர்ச்சை!
மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராடி வரும் நிலையில்.. அதிபர் புடின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
உக்ரைனில் ரஷ்யா போர் அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகிறது. இதுவரை உக்ரைனில் ஒரு சில நகரங்களை பிடித்து இருந்தாலும் ரஷ்யா மிகப்பெரிய முன்னேற்றம் எதையும் அடையவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் ரஷ்யாவின் ஆயுதங்கள், குண்டுகள் தீர்ந்துவிடும் என்றும் அமெரிக்கா உளவுத்துறை முன்பே அறிவித்து இருந்தது. இன்னும் கார்கிவ், தலைநகர் கீவ் போன்ற நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

ரஷ்யா எதிர்ப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவிலேயே மக்கள் சிலர் போராடி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் கூட உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் குரல் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் சேனல் 1 எடிட்டர் ஒருவர் டிவி நிகழ்ச்சியில் ரஷ்யாவில் ரஷ்ய அதிபருக்கு எதிராகவே பதாகை ஏந்தியது பெரிய சர்ச்சையானது. ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக பேசும் நபர்களுக்கு 15 வருடம் வரை சிறை தண்டனை கொடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை
இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் இது போன்ற போராட்டங்கள், உள்நாட்டு எதிர்ப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் இவர் கோபமாக பேசியது வீடியோவாக வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், நம் நாட்டில் இருக்கும் ஒட்டுண்ணிகளை, அழுக்குகளை, துரோகிகளை நாம் களைய வேண்டும். ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து இவர்கள் சதி செய்கிறார்கள்.

சுத்திகரிப்பு
இது போன்ற மக்களை நாம் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவை அழிக்க பார்க்கிறது. நம் மீது பொருளாதார தடைகளை விதித்து நம்மை அழிக்க பார்க்கிறார்கள். ரஷ்யாவில் யார் துரோகிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக நேர்மையான குடி மக்களுக்கும், துரோகிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை ரஷ்ய மக்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

சர்ச்சை
வாயிக்குள் புகுந்த பூச்சியை வெளியே துப்புவது போல இவர்களை நாம் வெளியே வீச வேண்டும். நமது நாட்டை இவர்கள் இன்றி சுத்தப்படுத்த வேண்டும். இது மட்டுமே நமது நாட்டையும், நமது நோக்கத்தையும் பாதுகாக்கும் ஒரே வழியாகும் என்று புடின் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் புடின் சுத்திகரிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications