வீட்டை விட்டு வெளியேற தடை.. ஜன்னல் பக்கம் போகாதீங்க.. கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பறந்த வார்னிங்
கத்தார்: ஈரான் தொடர்ந்து தாக்குவதால் கத்தாரில் உள்ள இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டில் ஜன்னல், பால்கனி மற்றும் திறந்தவெளி பகுதிகளில் நிற்க வேண்டாம் என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவுரைகளை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வழங்கி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, கத்தார் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கத்தார், அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. மேலும் கத்தாரில் அல் உதைத் என்ற அமெரிக்காவின் விமானப்படை தளம் உள்ளது.

இதனால் தான் அமெரிக்காவை பழி வாங்கும் வகையில் கத்தாரை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி தொடங்கியது. கடந் 2ம் தேதி அமெரிக்காவின் விமானப்படை தளத்தில் குண்டுபோட முயன்ற ஈரானின் 2 SU-24 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
6வது நாளாக தாக்குதல்
இதையடுத்து கத்தார் - ஈரான் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இன்று 6வது நாளாக கத்தார் தலைநகர் தோஹோவில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. . கத்தாரில் இந்தியர்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை இந்திய தூதரகம் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியர்களுக்கு அறிவுரை
இந்நிலையில் தான் கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை இந்திய தூதரகம் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்
''தற்போதைய சூழ்நிலையை கருத்தி்ல கொண்டு கத்தார் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மக்கள் செயல்பட வேண்டும். கத்தாரில் உள்ள இந்தியர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
* வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே தேவையின்றி நடமாடக்கூடாது.
* மிகவும் தேவையான சமயத்தில் மட்டுமே வெளியே வர வேண்டும்.
* வீட்டில் ஜன்னல்கள், பால்கனி, திறந்தவெளி பகுதிகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
Important Advisory pic.twitter.com/yCu4oJFMSa
— India in Qatar (@IndEmbDoha) March 4, 2026
உதவி எண்கள்
* புதிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டுமே நம்ப வேண்டும்.
* இன்று முதல் 24X7 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +974 55647502; +974 55362508 என்ற எண்களையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தூதகரத்தை தொடர்பு கொள்ளலாம்.
விமான பயணங்கள் பற்றி...
* கத்தார் வான்வெளி மூடப்பட்டதால் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான இயக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கத்தார் ஏர்வேஸ் மற்றும் பிற விமானங்களும் சேவையை நிறுத்தி உள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
* கத்தாரில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக கத்தார் அதிகாரிகளுடன் தூதரகம் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
-
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு!












Click it and Unblock the Notifications