பாஜக தலைவர்களுடன் விஜய் மல்லையா ரகசிய சந்திப்பு- ராகுல் குற்றச்சாட்டு
லண்டன்: நாடு கடத்தப்படவுள்ள விஜய் மல்லையா பாஜக தலைவர்களுடன் ரகசியமான முறையில் சந்தித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடனை பெற்றார் விஜய் மல்லையா. அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தப்பி ஓடினார். இதையடுத்து லண்டன் போலீஸ் உதவியுடன் அவரை பிடிக்க இந்திய அரசு முயற்சித்தது.

நீதிமன்றத்தில்
இந்நிலையில் அவரை கைது செய்து மும்பை சிறையில் வைக்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. எனினும் இந்திய சிறைச் சாலைகள் சுத்தமாக இருக்காது என்று விஜய் மல்லையா தரப்பு வாதம் செய்தது. இதனால் விஜய் மல்லையாவை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ள சிறையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை இந்திய அரசு வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

சிறப்பு சலுகைகள்
இந்நிலையில் இதுகுறித்து 4 நாட்கள் பயணமாக லண்டன் மற்றும் ஜெர்மனி சென்றுள்ள ராகுல் காந்தி கூறுகையில் இந்திய சிறைச்சாலைகள் சற்று கடுமையான இடங்கள்தான். ஆனால் நாட்டை விட்டே ஓடிபோன விஜய் மல்லையா போன்றோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கக் கூடாது.

சிறைச்சாலை
மல்லையா கவலைப்படும் அளவுக்கு இந்திய சிறையில் ஒன்றும் மோசமாக இருக்காது. நன்றாகவே இருக்கும். இந்தியர்களுக்கு ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். ரூ.9000 கோடியை வங்கிகளில் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய ஒருவர் சொகுசான சிறைச்சாலையை வேண்டுவதை ஏற்கமுடியாது.

பாஜக தலைவர்களுடன் சந்திப்பு
மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துள்ளார் என்ற ராகுல் அவர் யார் யாரை சந்தித்தார் என்பதை கூற மறுத்துவிட்டார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications