நிதி முறைகேடு வழக்கு: ராஜபக்சே மகனுக்கு ஜாமீன் வழங்க இலங்கை நீதிமன்றம் மறுப்பு !
கொழும்பு: தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ராஜபக்சே மகன் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க இலங்கை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித்த ராஜபக்சே உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களை வரும் 27 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக கடந்த 30 ஆம் தேதி இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோசித்த ராஜபக்சே உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை 12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் யோசித்த ராஜபக்சே உள்ளிட்ட 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகள் முடிவடைந்து விட்டதால், சந்தேக நபர்களை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் வாதாடினார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தொடந்து விசாரணைகள் நடைபெற்று வருவதால் இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அதற்கு பாதிப்பு ஏற்படும் என கூறினார். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார். மேலும் வரும் 27 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications