பாக். சார்க் மாநாட்டில் ராஜ்நாத்சிங் உரையை கவர் செய்ய மீடியாக்களுக்கு அனுமதியில்லை! இந்தியா ஷாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும், சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையை கவர் செய்ய மீடியாக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இது இந்திய தரப்பை அவமானப்படுத்துவதை போல உள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்க ராஜ்நாத்சிங் இஸ்லாமாபாத் சென்றுள்ள நிலையில், அங்கு சில வலதுசாரி அமைப்பினர் அவரது வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இன்று காலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. துவக்க விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகானும் உரையாற்றினார். இவர்கள் உரைகளின்போது செய்தி சேகரிக்க உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ராஜ்நாத்சிங் பேசுகையில், மீடியாக்கள் வெளியேற்றப்பட்டனர். ராஜ்நாத்சிங் தனது உரையில், தீவிரவாதிகள் மீது மட்டும் கடுமையான நடவடிக்கை எடுப்பது முக்கியம் அல்ல, தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் அமைப்புகள், தனிநபர்கள், நாடுகள் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை வலுவாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என பிரித்து பார்க்க தேவையில்லை. தீவிரவாதம் தீவிரவாதம் தான் என்றார்.
இதனிடையே மீடியாக்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு எதிராக இழைக்கப்பட்ட அவமானம் என சலசலப்பு உருவாகியுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா இதுகுறித்து விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் அந்த நாட்டுக்கு எதிராகவே இந்திய உள்துறை அமைச்சர் மறைமுக தாக்குதல் நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல்தான் மீடியாக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications