இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த... இஸ்ரேல் செல்கிறார் ராஜ்நாத் சிங்
ஜெருசலேம்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்ரேலுடனான உறவு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளார் ராஜ்நாத் சிங்.

குறிப்பாக காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட விடாமல் பாஜக அரசு பிடிவாதமாக இருந்து இந்தியாவில் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் தற்போது இந்திய அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்குப் போகிறார்.
நவம்பர் 6ம் தேதி ராஜ்நாத் சிங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதாயன்ஹுவைச் சந்தித்துப் பேசுகிறார். நான்கு நாட்களுக்கு இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் ராஜ்நாத் சிங்.
இந்த பயணத்தின்போது பல்வேறு இஸ்ரேலிய தலைவர்களை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications