ரமலான் பிறை: சவுதியில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. இந்தியாவில் நாளை முதல் தொடக்கம்
சவுதி: சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதால் இன்று முதல் (மார்ச் 1) ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பிறை தெரியாததால் ரமலான் மாதம் மார்ச் 2 இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகை மற்றும் ரமலான் மாத நோன்பு ஆகியவை பிறை தெரிவதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. உலகில் அனைத்து பகுதிகளிலும் எப்போது பிறை தெரிகின்றதோ அதை வைத்தே நோன்பு தேதி மற்றும் பண்டிகை கொண்டாடப்படும். ஒவ்வொரு பகுதிகளுக்கு இந்த தேதி ஒருநாள் வரை மாறுபடும்.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை இவர்கள் தண்ணீர், உணவு போன்ற எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள். சவுதி அரேபியாவில் சுதைர், துமைர் ஆய்வகங்களில் ரமலான் தொடக்கத்தை குறிக்கும் பிறை தென்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ரமலாந் புனித மாதம் நேற்று இரவு அதவாது பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்ததையடுத்து, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர். இன்று மார்ச் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவுள்ளனர். நேற்று இரவு முதல் ரமலான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.
அதே சமயத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற பிற நாடுகளில் நேற்று பிறை தெரியவில்லை. அதனால் இன்று மார்ச் 1 ஆம் தேதி இரவு முதலே ரமலான் மாதம் தொடங்கும். பிறை நேற்று தெரியாததால் இங்கு நோன்பு பின்பற்றுவதும் ஒரு நாள் வரை தள்ளிப்போகும். அதாவது ஞாயிற்றுக்கிழமை மார்ச் 2 ஆம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
பிப்ரவரி 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று பிறை தெரியாததால் ரமலான் நோன்பு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகம்மது அய்யூப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 - 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!











Click it and Unblock the Notifications