என்னைக்குதான் விடிவு காலம் பிறக்குமோ.. இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் மற்றும் அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. கைதான 22 பேரும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீனவர்கள் 22 பேரும் மீணவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருந்தது. அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் மேலும் 12 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க இரண்டு விசைப்படகுகளுடன் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான 22 பேரும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீனவர்கள் 22 பேரும் மீணவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications