துபாயில் ரம்ஜான் கொண்டாட்டம், குதூகலம், உற்சாகம்
துபாயில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் கடைபிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி, விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன், மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் திருநாள் ரம்ஜான் ஆகும்.

இந்த நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நாகை, நாகூர், திருச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்கும் நாளாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

செய்தி- புகைப்படம்: இன்சான் அலி, துபாய்












Click it and Unblock the Notifications