இந்தியா முன்வைக்கும் ஈழத் தமிழருக்கான 13-வது திருத்தம்-அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்
கொழும்பு: இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிக்ளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கொழும்பில் நேற்று அதிகாரப் பகிர்வு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜேவிபி தவிர பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன.

இலங்கை அனைத்து கட்சிக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது; போலீஸ் அதிகாரம் தவிர எஞ்சிய அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியும். இது தொடர்பாக அமைச்சரவையில் என்னுடைய தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது போதுமானது அல்ல. அனைத்து தரப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவாதிக்க வேண்டியதும் அவசியமாகும். இலங்கையின் மாகாண சபைகள் முழுமையாக செயல்பட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் 9 மாகாண சபைகளில் 7-; சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 2-ல் தமிழர் பெரும்பான்மையினர். மாகாண சபை முறை தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் தற்போதைய குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும்.

13-வது திருத்தம் என்பது தமிழர் பெரும்பான்மையினராக வசிக்கும் மாகாண சபைகள் தொடர்பானது மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொருந்தக் கூடியது. ஆகையால்தான் இலங்கையின் அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு!












Click it and Unblock the Notifications