4 லட்சம் பேர் சிறைபிடிப்பு.. 27,000 குழந்தைகளின் நிலை தெரியவில்லை.. சிரியாவை உலுக்கும் சிவில் வார்
சிரியாவில் நடந்து வரும் போர் தற்போது மிகவும் உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது.
Recommended Video
டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் போர் தற்போது மிகவும் உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது. போரை எந்த காரணம் கொண்டும் நிறுத்த முடியாது என்று அந்நாட்டின் அரசு படை தெரிவித்து இருக்கிறது.
2011ல் லேசாக தொடங்கிய பிரச்சனை 2012ல் பெரிதாகி தற்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இதுவரை அங்கு நடக்கும் போரில் 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
பல்வேறு பேச்சு வார்த்தைகள், ஐநா தீர்மானங்கள் என பல போடப்பட்டும் இதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறிய மருத்துவ உதவி கூட அந்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.
என்ன பிரச்சனை
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசுக்கு நிறைய நாட்டு படைகள் உதவியாக இருக்கிறது.
படை
அதே சமயம் அந்நாட்டு கிளர்ச்சி படையும் தன்னுடன் நிறைய கிளர்ச்சியாளர்களை வைத்து இருக்கிறது. கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான இயக்கங்கள் சேர்ந்து ஒன்றாக அங்கு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு சில இஸ்லாமிய நாடுகள் மறைமுக ஆதரவு தெரிவித்தும் வருகிறது.
தெற்கு
இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த ''ஃபிரி சிரியன் ஆர்மி'' என்ற படையை உருவாக்கி இருக்கிறார்கள். தெற்கு சிரியா இவர்கள் கைவசம் இருக்கிறது. அதேபோல் தலைநகரின் முக்கிய பகுதியான கவுட்டாவும் இவர்கள் வசம்தான் உள்ளது. இதற்காகத்தான் தற்போது போர் நடக்கிறது.
அதே கதை
ஆனால் அதேசமயம் அங்கு கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலும் சில சில பிரச்சனைகள் நடந்து வருகிறது. யார் யாருக்கு தலைமை என்ற பிரச்சனை காரணமாக அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் நிலையும் இருக்கிறது. 2015ல் ஒரு முறை இவர்களுக்கு இடையில் பிரச்சனை பெரிதானது.
தீவிரம்
தற்போது அரசு மிகவும் பலமாக இருக்கிறது. அந்நாட்டு அரசுக்கு தற்போது ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் உதவி செய்து வருகிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களிடம் இருக்கும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
நாளுக்கு நாள்
தற்போது நாளுக்கு நாள் அங்கு போர் தீவிரமாக நடந்து வருகிறது. 2000 பேர் வரை காயம் அடைந்து இருக்கிறார்கள். 400 பேர் வரை மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனாலும் அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை.
இல்லை
அதேபோல் அந்த நாட்டிற்குள் சென்று பாதுகாப்பு பணிகளை செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. முக்கியமா செஞ்சிலுவை இயக்கம், சர்வதேச உணவு அமைப்பு யாருக்கும் அங்கு செல்ல இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்கு இருக்கும் 4 லட்சம் பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.