பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான்.. பகீர் கிளப்பும் அமெரிக்க ஆய்வாளர்
பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
நியூயார்க்: பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். பங்கு சந்தையில் இதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.
சமீப காலமாக பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இவரது இந்த அறிவிப்பு பொருளாதார வல்லுனர்களுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பிட்காயின் மீதான நம்பகத்தன்மையும் மிகவும் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் பிட்காயினுக்கு ஏன் உலகில் உண்மையான மதிப்பு இல்லை என்றும் அதிர்ச்சி அளிக்க கூடிய காரணங்களை சொல்லி இருக்கிறார்.

பிட்காயின்
உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.

பயன் என்ன
இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.

மதிப்பு என்ன
தற்போதைய சந்தை நிலவரப்படி இதனுடைய மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும். அதாவது 16 ஆயிரம் டாலர். இந்த வருட தொடக்கத்தில் இதன் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே இருந்தது. ஆனால் ஒரே வருடத்தில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 10,000 டாலர் வரை இது உயர்ந்தது. இடையில் சில நாள் வீழ்ச்சியும் அடைந்தது.

மதிப்பே இல்லை
இந்த பணத்திற்கு மதிப்பே இல்லை என்று 'மோர்கன் ஸ்டான்லி' என்ற அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார். இதன் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். நாம் பார்க்கும் மதிப்பு வெறும் மாயை என்றும் எப்போது வேண்டுமானாலும் இது திவாலாகி மறைந்து போகும் என்று அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இது உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதுதான் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் யார் என்று இன்னும் கண்டிபிடிக்கப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications