Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவாஸ் ஷெரீப் ரிட்டர்ன்..? பரபரக்கும் பாகிஸ்தான்.. அனல் பறக்கும் அரசியல் களம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வான நிலையில் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமரும், அவரது அண்ணனுமான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

இதனால் இம்ரான்கான் பதவியை இழந்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியாவார்.

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமாக இருந்த காலத்தில் பல்வேறு ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பனாமா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. விசாரணை, நீதிமன்றத்தில் ஆஜர் என நவாஸ் ஷெரீப் அலைந்து வந்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

லண்டனில் சிகிச்சை

லண்டனில் சிகிச்சை

இந்நிலையில் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 2019ல் லாகூர் உயர்நீதிமன்ற அனுமதியுடன் நவாஸ் ஷெரிப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றார். 4 வாரம் மட்டும் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் அவர் நாடு திரும்பவில்லை. அவர் லண்டனிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு விசாரணைக்கு பயந்து தான் அவர் லண்டனில் தஞ்சமடைந்துள்ளதாக இம்ரான்கான் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாடு திரும்புகிறாரா...

நாடு திரும்புகிறாரா...

இந்நிலையில் தான் பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்துள்ளது. நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாகி உள்ளார். இதனால் நவாஸ் ஷெரீப் நிம்மதி அடைந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

 தலைவர்கள் கூறுவது என்ன

தலைவர்கள் கூறுவது என்ன

இதுகுறித்து பிஎம்எல்-என் கட்சியின் எம்பி ஜாவித் லத்தீப் கூறுகையில், ‛‛மே மாதம் முதல் வாரத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்துக்கு பிறகு அவர் நாடு திரும்புவார்'' என்றார். இதுபற்றி கட்சியின் செய்தித்தொடர்பாளரான மரியம் அவுரங்சீப் கூறுகையில், ‛‛நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. லண்டனில் உள்ள அவரது டாக்டர் தான் பயணம் குறித்து முடிவு செய்வார். பயணம் செய்ய நவாஸ் ஷெரீப்பின் உடல் ஒத்துழைத்தால் மட்டுமே அவர் லண்டனில் இருந்து புறப்படுவார்'' என்றார்.

தேர்தலுக்கு தலைமை

தேர்தலுக்கு தலைமை

இன்னொரு மூத்த தலைவர் கூறுகையில், ‛‛விரைவி்ல பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவார். அவர் தலைமையில் தான் தேர்தல் சந்திக்கப்படும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தலைவர்கள் இவ்வாறு கூறினாலும் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது குறித்து அவரது தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+