கப்சிப் ஆன பெய்ஜிங்.. விமானங்கள், ரயில்கள் ரத்து?.. என்னதான் நடக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள்?
பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள ஜி ஜிங்பிங்தான் தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். இங்கு சமூக வலைத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.
இவ்வாறு இருக்கையில், தற்போது சீனாவில் அந்நாட்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

இதே வேலை
ஏறத்தாழ இந்தியாவும் சீனாவும் ஒரே காலகட்டத்தில்தான் சுதந்திரம் அடைந்தன. ஆனால் தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா வளர்ந்து நிற்கிறது. மட்டுமல்லாது அமெரிக்காவின் பொருளாதாரத்தை விரைவில் முந்தி விடும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே சீனாவுக்கு எதிரான கருத்துக்கள் அவ்வப்போது மேற்கு உலகம் சார்பில் கட்டவிழ்த்து விடப்படுவது இயல்பான ஒன்றுதான்.

வளர்ச்சி
இதற்கு காரணம் சீனாவின் பொருளாதார கொள்கைதான். கடந்த 1978ல் இந்த பொருளாதாரக் கொள்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தற்போது வரை அந்நாட்டில் வறுமையிலிருந்து சுமார் 500 மில்லியன் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறத்தில் கல்வி, சுகாதாரத்திலும் வளர்ச்சி முன்னேற்றப்பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா தொற்றை சீனா எவ்வாறு எதிர்கொண்டது என்பதிலிருந்து அந்நாட்டின் வளர்ச்சி யாருக்கானது? எவ்வாறாக? இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

வதந்தி
நிலைமை இவ்வாறு இருக்க, அவ்வப்போது சீனாவுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்படுவது இயல்புதான். அந்த வகையில் தற்போது அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்க் பிங்க் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் இருக்கிறார் என்றும், ராணுவ புரட்சி நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிவிட்டரில் #ChinaCoup எனும் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சனிக்கிழமையான நேற்று பெய்ஜிங்கிலிருந்து எந்த விமானங்களும் பயணம் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

விமான சேவை
மேலும், நாட்டின் அனைத்து பகுதியிலும் பேருந்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 22ம் தேதி டிவிட்டரில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இது ராணுவ புரட்சியை உண்மை என்று உறுதி செய்யும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளது. அதில், சுமார் 80 கி.மீ நீளத்திற்கு ராணும் அணிவகுத்து நிற்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த வீடியோவின் உண்மை தன்மையை சரியாக ஆராய முடியவில்லை. இந்த வதந்தி குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் கூட சமீபத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications