ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை.. கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற தாலிபான்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோஹுல்லா சலேவை தாலிபான்கள் சித்திரவதை செய்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை தாலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். அங்கு தலிபான்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் பதவியேற்க உள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 99 99 சதவீத மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.

தாலிபான்களுக்கு தலைவலி
ஆனால் ஒரே ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்தது. அதுதான் பஞ்ச்ஷிர் மாகாணம் இந்த மாகாணத்தில் உள்ள தேசிய கிளர்ச்சி படையினர் தாலிபான்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஒரு சில மாவட்டங்களையும் கைப்பற்றிதால் இவர்களால் தாலிபான்களுக்கு தலைவலி உண்டானது.

பஞ்ச்ஷிர் மாகாணம்
இவர்களை இப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்த தலிபான்கள், தேசிய கிளர்ச்சி படையினருடன் சண்டையிட தொடங்கினார்கள். இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். முடிவில் பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோஹுல்லா சலேவை பஞ்ச்ஷிரில் நடந்த மோதல்களின் போது தாலிபான்கள் சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

ரோஹுல்லா சலே
வியாழக்கிழமை இரவு நடந்த மோதல்களின் போது ரோஹுல்லா சலே கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. 'தாலிபான்கள் நேற்று ரோஹுல்லா சலேவை கொன்றனர். எங்களை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டார்கள். அவரது உடல் அழுக வேண்டும் என்று தாலிபான்கள் தொடர்ந்து கூறினார்கள்' என்று ரோஹுல்லா சாலேயின் மருமகன் எபதுல்லா கூறியதாக செய்தி நிறுவனம் ஓன்று கூறுகிறது.
Recommended Video

தப்பி விட்டனர்
தேசிய கிளர்ச்சி படையின் தலைவரான அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலே தாலிபான்கள் ஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றிய பின்னர் அங்கு இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறின. அவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவில்லை. தாலிபான்களுடன், அவர்களது எதிர்ப்பு படை சண்டையிட்டு வருகின்றன என்று தஜிகிஸ்தானின் தூதர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications