துப்பாக்கிச்சூடு சம்பவங்களை பார்த்து பார்த்து அமெரிக்காவுக்கு மரத்துவிட்டது: ஒபாமா வருத்தம்
வாஷிங்டன்: அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லை என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள உம்பக்வா சமூகக் கல்லூரியில் 26 வயது கிறிஸ் ஹார்பர் மெர்சர் என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியாகினர். அதன் பிறகு கிறிஸ்ஸை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
குழந்தைகளை கட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ள அதிர்ஷ்டசாலிகள் குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினர் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தால் மட்டும் போதாது. சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
பிறரை கஷ்டப்படுத்த நினைப்பவர்களின் கைகளில் துப்பாக்கி எளிதில் கிடைக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதை பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்டது. கல்லூரியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அதை எதற்காக செய்தார் என தெரியவில்லை. அவருக்கு மனநலம் சரியில்லை என்று யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.
அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லை. அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கும் முன்னேறிய நாடு நம் நாடு மட்டும் அல்ல.
சுரங்க விபத்தில் அமெரிக்கர்கள் பலியானால் சுரங்கங்களில் பாதுகாப்பை பலப்படுத்துகிறோம். சாலைகள் சரியில்லை என்றால் சரியாக்குகிறோம். விபத்துகளில் பலர் பலியாவதை தடுத்த சீட் பெல்ட் அணியும் சட்டம் கொண்டு வந்தோம். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க உரிய சட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி சிந்திக்குமாறு அமெரிக்க மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications