இந்தோனேசியா: எரிமலை மீண்டும் வெடித்தது; 20,000 பேர் வெளியேற்றம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறி சாம்பலை கக்கி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவில் சீனாபங்ஸ் எரிமலை உள்ளது. சனிக்கிழமை இரவு இந்த எரிமலை வெடிக்க தொடங்கியது. சுமார் 50 தடவை வெடித்த அந்த எரிமலையில் இருந்து சாம்பல் மற்றும் நெருப்பு குழம்பு வெளியானது.
இன்று மீண்டும் எரிமலை வெடித்து சிதறுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் காற்றில் சாம்பல் பரவுகிறது. வானில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்கிறது.

இதனையடுத்து சீனாபங்ஸ் எரிமலை அருகேயுள்ள ஜிவாரா, பிந்து பெசி மற்றும் அதை சுற்றி 7 கி.மீட்டர் பரப்பளவில் வாழும் கிராம மக்கள் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications