Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவ்வளவு ஈஸி இல்லை! விக்கித்து போன புடின்! ஸ்மார்ட் கேம் ஆடும் உக்ரைன் அதிபர்! பரபர உளவுத்துறை REPORT

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனுக்கு உள்ளே ரஷ்யா படைகள் புகுந்து உள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. இது தொடர்பாக முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Smart Game ஆடும் Ukraine அதிபர்..UK உளவுத்துறை பரபர REPORT | Oneindia Tamil

    உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான முதல் மூன்று சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடக்கும்.

    உக்ரைனின் கிழக்கு பகுதியை சுதந்திர பகுதியாக அறிவிக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதனால் கிழக்கு பகுதியை குறி வைத்து ரஷ்யா தனது படைகளை நகர்த்தி வருகிறது.

    உக்ரைன் ரஷ்யா

    உக்ரைன் ரஷ்யா


    உக்ரைன் உள்ளே 80 சதவிகித ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட 60 சதவிகித ரஷ்ய படைகள் இப்போது கீவ் எல்லையில்தான் இருக்கின்றன. ஆனால் கீவ் எல்லை உள்ளே நுழைந்ததும் ரஷ்யா படைகள் எதிர்பார்க்காத ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த அளவிற்கு உக்ரைன் படைகள் அங்கே இருக்கும். அவர்களிடம் இவ்வளவு ஆயுதங்கள் இருக்கும், ஏவுகணைகள், விமானங்கள் இருக்கும் என்று புடின் நினைக்கவில்லை.

    ரஷ்யா ஏமாற்றம்

    ரஷ்யா ஏமாற்றம்

    இதனால் ரஷ்ய படை கீவ் எல்லைக்கு வந்ததும் பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளானதாக யு.கே உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. அந்நாட்டு ராணுவம் பொதுவில் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் உக்ரைனில் இருக்கும் படைகள் பற்றி ரஷ்யா தப்பு கணக்கு போட்டுவிட்டது. இதனால் கீவை பிடிப்பதை பற்றிய திட்டத்தில் அவர்கள் சொதப்பிவிட்டனர். கடந்த 4 நாட்களாக கீவை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. அதிலும் உக்ரைன் தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் மிக மிக குறைந்த அளவில் மட்டுமே ரஷ்யா முன்னேறி உள்ளது.

     புடின் ஏமாற்றம்

    புடின் ஏமாற்றம்

    புடின் இதனால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால் ரஷ்ய படைகள் கூடுதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கார்கிவ் பகுதியில் ரஷ்யா அதிக அளவில் குண்டுகளை போட்டதற்கு காரணம் இந்த சறுக்கல்தான். இடமாற்றம், எப்படி செல்வது, உக்ரைன் படைகளை எப்படி எதிர்கொள்வது, போதிய குண்டுகள் இல்லாதது போன்ற காரணங்களால் ரஷ்யா கீவ் எல்லையில் பின் தங்கி உள்ளது.

     வரிசையாக நிற்கிறது

    வரிசையாக நிற்கிறது

    சாட்டிலைட் படங்கள் படி பார்த்தால் உக்ரைன் தலைநகர் வெளியே 64 கிமீ தொலைவிற்கு பீரங்கிகள் ரஷ்யா மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் உள்ளே செல்ல முடியாமல் இப்படி வெளியே படைகளை நிறுத்தி உள்ளனர். இதற்கு முன் 27 கிமீ தூரமாக இருந்த லைன் தற்போது 64 கிமீ தூரமாக மாறியுள்ளது. இதன் அர்த்தம் படைகளால் முன்னேற முடியாமல் வெளியே லைனில் நிற்க வேண்டியதாகிவிட்டது என்பதுதான் என்று யு.கே உளவுத்துறை ரிப்போர்ட் கூறியுள்ளது.

    வான் பகுதி

    வான் பகுதி

    அதோடு உக்ரைனில் கீவ் வான்பகுதியை ரஷ்யா இன்னும் கைப்பற்ற முடியவில்லை. கீழே உக்ரைன் ஏவுகணைகள் இருப்பதால் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்பே வான்பகுதியை கைப்பற்ற முடியும். இதனால் ரஷ்யா இங்கும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் ரஷ்யா இரவு நேர தாக்குதல் ஆபரேஷனை உக்ரைனில் செய்து வருவதாக யுகே தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது.

    போன்கள் தடை

    போன்கள் தடை

    மேலும் உக்ரைனில் இணையம் கட் செய்யப்பட்டு, உக்ரேன் மக்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஸ்டார்லிங்க் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யா போன்கள், சிம்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஜாமர்கள் மூலம் பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா இங்கே கடுமையாக திணறி வருகிறது. உக்ரைன் இந்த போரில் ஸ்மார்ட் கேம் ஆடி வருகிறது என்று கூறப்படுகிறது. தெருக்களின் பெயர்கள் கூட நீக்கப்பட்டுள்ளதால் ரஷ்யா எங்கே செல்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய் இருப்பதாக இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

    உளவு ரிப்போர்ட் என்ன சொல்கிறது

    உளவு ரிப்போர்ட் என்ன சொல்கிறது

    இந்த போரில் இதுவரை உக்ரைனுக்கு 32க்கும் அதிகமான நாடுகள் ஆதரவு அளித்து உள்ளன. இதனால் ரஷ்யா நினைத்ததை விட போர் மோசமாகி உள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உக்ரைனை சமாளிக்க முடியாமல் இந்த நிமிடம் ரஷ்யா திணறி வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பின்லாந்து, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் ஆயுதம் வழங்குவதால் உக்ரைன் கை இதில் ஓங்க தொடங்கி உள்ளது என்று யு.கே உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+