Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புடின் அரசை கவிழ்க்க பிளான்.. கூட இருந்து குழி பறித்த நெருங்கிய நண்பர்? உக்ரைன் உளவுத்துறை பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் புடின் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு, அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் அரசை நிறுவ அந்நாட்டு கோடீஸ்வரர்கள் முயன்று வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    கூட இருந்து குழி பறித்த நெருங்கிய நண்பர்? | Ukraine Intelligence வெளியிட்ட பகீர் தகவல்

    உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரஷ்ய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன.

    அலிகார்க்ஸ்தான் ரஷ்யாவில் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும், அரசின் முடிவுகளை தீர்மானிக்கும் குழு ஆகும். ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த குழுவாக அலிகார்க்ஸ் குழு பார்க்கப்படுகிறது.

    பொருளாதார தடை

    பொருளாதார தடை

    இந்த நிலையில்தான் அலிகார்ஸுக்கு சொந்தமான மாட மாளிகைகள், சொத்துக்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை மேற்கு உலக நாடுகள் முடக்கி வருகின்றன. வெளிநாடுகளில் இவர்கள் சேர்த்து வைத்து இருந்த சொத்துக்கள், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இவர்களின் சேமிப்புகளை மேற்கு உலக நாடுகள் முடக்கி வருகின்றன. இதனால் ரஷ்யாவை சேர்ந்த அலிகார்க்ஸ் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

     கோபம்

    கோபம்

    இந்த போர் காரணமாகவே அலிகார்க்ஸ் இவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதையடுத்து போரை தொடங்கி வைத்த புடின் மீது அலிகார்ஸ் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் புடின் மீது கோபத்தில் இருக்கும் அலிகார்ஸ், அவரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார். அதில், ரஷ்ய அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் அலிகார்ஸ் புடின் அரசை கவிழ்க்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு பாய்சன் கொடுத்தோ, சாலை விபத்து ஏற்படுத்தியோ, அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியோ, அரசை கவிழ்க்க ரஷ்ய பணக்காரர்கள் முயன்று வருகிறார்கள். அந்நாட்டின் சக்தி வாய்ந்த நபர்கள் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கவிழ்க்க இவர்கள் முயன்று வருகிறார்கள் என்று உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.

    நெருங்கிய நண்பர்

    நெருங்கிய நண்பர்

    மேலும் ரஷ்ய அதிபருக்கு நெருக்கமானவரும், ரஷ்ய உளவுத்துறையின் இயக்குனருமான அலெக்ஸ்சாண்டர் போர்ட்னிகோவை வைத்து ஆட்சியை கவிழ்த்துவிட்டு. அவரை ரஷ்யாவின் அதிபராக பதவியில் அமர்த்த அந்நாட்டு அலிகார்க்ஸ் முயன்று வருகிறார்கள். இதன் மூலம் மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளை நீக்கி, மீண்டும் அவர்களுடன் உறவு மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அலிகார்க்ஸ் இருக்கிறார்கள் என்று உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.

    ஏன் கோபம்

    ஏன் கோபம்

    உக்ரைன் போரில் ரஷ்யா பின்னடைவை சந்தித்துள்ளது. உக்ரைன் போரில் புடின் தவறு செய்துவிட்டார். அவர் தப்பு கணக்கு போட்டுவிட்டார். அதனால் அலிகார்க்ஸ் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் மக்களும் புடின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ரஷ்யாவின் முகத்தை இதில் காக்க வேண்டும் என்று அதிபர் புடினின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அலெக்ஸ்சாண்டர் போர்ட்னிகோவை அதிபராக நியமிக்க வேண்டும் என்று ரஷ்ய பணக்காரர்கள் கருதி வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+