பழமைவாதிகளுக்கு பரிசு தாலி கட்டிய “மனைவி”- தென் ஆப்ரிக்க டிவி தலைமை அதிகாரி மீது விசாரணை
கேப்டவுன்: தென் ஆப்ரிக்க எஸ்ஏபிசி தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி அங்குள்ள பழமைவாதிகளுக்கு தன்னுடைய மனைவியையே பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பழமைவாதிகள் நிறைந்த நாடு தென் ஆப்ரிக்கா. அங்குள்ள லிம்போபோ என்னும் மாகாணத்தில் தலைவர்களுக்கு பெண்களை பரிசாக வழங்கும் கொடுமையான மூடத்தனம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் தொகோயாண்டோ பகுதியில் தென் ஆப்ரிக்காவின் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவன தலைமை அதிகாரியான ஹலாடி மோட்சோனெங்கின் மனைவி உட்பட 10 பெண்களை வரிசையாக நிற்க வைத்து பழமைவாதிகளின் தலைவர்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியால் கொதித்துப் போய் உள்ள பெண்கள் நல அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளன. இதன் அடிப்படையில் தென் ஆப்ரிக்க அரசு ஹலாடி மீது விசாரணை கமிஷன் அமைத்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications