34 வயசு டீச்சர்.. டியூஷன் படிக்க வந்த 15 வயசு பையன்.. 9 முறை.. அதிர வைத்த ஷாக் சம்பவம்!
15 வயது சிறுவனுடன் உறவு வைத்துள்ளார் பள்ளி ஆசிரியை ஒருவர்
லூசியானா, அமெரிக்கா: டியூஷன் படிக்க வந்த 15 வயசுப் பையனை மயக்கி அவனுடன் 8, 9 முறை உறவு கொண்டதாக 34 வயசு டீச்சரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த டீச்சரின் பெயர் எல்லாரியா சில்வா. லூசியானா மாகாணத்தில் உள்ள ஜக்காரி என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் இந்த டீச்சர். இவர் தனது வீட்டில் டியூஷன் வேறு நடத்தி வருகிறார். இவரிடம் டியூஷனுக்கு 15 வயசு சிறுவன் ஒருவன் வருவான்.
அந்தப் பையனை மடக்கி, மயக்கி செக்ஸ் உறவு வைத்துள்ளார் இந்த டீச்சர். அதுவும் 8, 9 முறை வைத்துள்ளாராம். என்ன கொடுமை என்றால் இந்தப் பையனுடன் சில்வா உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த டீச்சரின் மகனும் கூட அதே வீட்டில் இருந்துள்ளான்.

நடவடிக்கை
இந்த விவகாரம் முதலில் போலீஸாருக்குப் போயுள்ளது. ஆனால் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். ஆனால் பின்னர் கோர்ட்டுக்கு மேட்டர் போனதும் போலீஸார் சுதாரித்துள்ளனர். இதையடுத்து போலீஸ் விசாரணைக்காக சில்வாவே தானாக முன்வந்து ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் செய்ததை ஒப்புக் கொண்டாராம் சில்வா.

வழக்குகள்
இதற்கிடையே, இந்த விவகாரம் பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு தெரிந்தும் கூட அதை கண்டு கொள்ளாமல்விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தாங்கள் எதையும் மறைக்கவில்லை. யாரையும் காப்பாற்றவும் முயலவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.தற்போது டீச்சரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனராம். அவர் மீது ஏகப்பட்ட புகார்களை போலீஸார் சுமத்தி வழக்குகளை போட்டுள்ளனர்.

15 வயது சிறுவன்
கடந்த கோடை காலத்தின்போதுதான் இந்தக் கூத்துக்களை அரங்கேற்றியுள்ளார் டீச்சர் சில்வா. வாய் வழியாகவும், உடல் ரீதியாகவும் அந்தப் பையனுடன் டீச்சர் உறவு வைத்துள்ளாராம். இதற்காக அந்த சிறுவனை முதலில் மயக்கி தனது வழிக்குக் கொண்டு வந்துள்ளார். எப்படியென்றால் முதலில் நிர்வாணப் படங்களை அனுப்பி வைத்துள்ளார். அது பத்தாதென்று நிர்வாண வீடியோக்களை வேறு அனுப்பியுள்ளார். அதில் டீச்சரே நிர்வாணமாக தோன்றினாராம். ஆனால் முகத்தை மட்டும் மறைத்து அனுப்பியுள்ளார்.

டீச்சர்
இதைப் பார்த்து அந்த சிறுவன் உணர்ச்சிவசப்பட்டுள்ளான். அதன் பின்னர் டீச்சர் மெல்ல மெல்லபேசி சிறுவனை கரைத்துள்ளார். கடைசியில் உடல் ரீதியான உறவுக்கு கொண்டு போய் விட்டாராம். உறவு வைத்துக் கொள்ளும்போதெல்லாம் டீச்சரே வந்து சிறுவனை தனது காரில் கூட்டிக் கொண்டு போவாராம். எல்லாம் முடிந்ததும் அவரே கொண்டு வந்து வீட்டில் விடுவாராம். என்ன பொறுப்பு பாருங்க!

சிக்கிய ஆசிரியை
தனது வேலைக்கு வசதியாக சிறுவனுக்கு போதைப் பொருளையும் அவனுக்குத் தெரியாமல் கொடுத்துள்ளாராம் டீச்சர். இதையும் போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனராம். ஒரு கட்டத்தில் தங்களது உறவை எல்லோருக்கும் தெரிவித்து விடலாமா என்று சிறுவன் கேட்டுள்ளான். இதைக் கேட்டு பதறிப் போய் விட்டார் டீச்சர். இல்லப்பா இருப்பா, அவசரப்படாதப்பா.. படிப்பு கெட்டுப் போய்ரும் என்று அவனை தடுத்துள்ளார். ஆனால் மேட்டர் வெளியாகி இப்போது டீச்சர் சிக்கி விட்டார்.












Click it and Unblock the Notifications